Thursday, September 1, 2011

திருக்குறளும் என் பார்வையும்..!- 031


திருக்குறள் (31) 

அணங்குகொல் ஆய்மயில் கொல்லோ கனங்குழை
மாதர்கொல் மாலுமென் நெஞ்சு. (1081)


சோலையில் தலைவியைக் கண்ட தலைவன் அவள் அழகைக்கண்டு கீழ்க்கண்டவாறு வியக்கிறான்:

இங்கே தனிமையில் வந்து மிக ஒயிலாக அழகு மயிலாக காதுகளில் கனத்த குழல்களை அணிந்து அழகே உருவாக நிற்கும் இந்த வஞ்சிமகள் கொஞ்சுதமிழ் பேசும் பெண்தானா? இல்லை தேவலோகத்திலிருந்து மெதுவாக இறங்கிவந்த தேவதையோ? இவள் யாரென்று அறிய முடியாமல் என் மனம் மிகவும் மயங்குகிறது! 


No comments: