Thursday, September 1, 2011

திருக்குறளும் என் பார்வையும்..!- 033


திருக்குறள் (33) 

வாய்மை எனப்படுவது யாதெனின் யாதொன்றும்
தீமை இலாத சொலல்.(291)


வாய்மை அதாவது உண்மை என்று சொல்லப்படுவது எதுஎனில் எந்த உயிருக்கும் தீங்கு ஏற்படாத வகையில் சொல்லப்படுதல் யாவும்தான்!

வள்ளுவர் கூற விழைவது யாதெனில் சில சமயங்களில் உண்மையை சொல்லாமலும் இருக்கலாம்; அதனால் சில உயிர்களுக்கு நன்மை கிடைக்குமெனில்!

உண்மை யென்பதும் பொய்யென்பதும் பிற உயிர்களுக்கு அதனால் என்ன நன்மை கிடைக்கிறது என்பதைப் பொறுத்ததுதான்! 

நம்மால் சொல்லப்படும் ஒரு பொய் ஓர் உயிரைக்காக்குமெனில் அப்பொய் மன்னிக்கப்படுகிறது என்பதும் நாம் கூறும் உண்மை ஒருவருக்குத் தீமை விளைவிக்குமெனில் அவ்வுண்மை தவிர்க்கப்படலாம் என்பதும் வள்ளுவர் கூற விழைவதாகும்.

1 comment:

Esha Tips said...

பாராட்டுக்கள் தொடருங்கள்

தமிழ்த்தோட்டம்
www.tamilthottam.in