Thursday, September 1, 2011

திருக்குறளும் என் பார்வையும்..!- 017


 திருக்குறள் (17) 

இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்து
அதனை அவன்கண் விடல். 
(517)

இந்தத் தொழிலை இக்கருவியால் இன்னவன் முடிப்பான் என்று ஆராய்ந்த பிறகு அத்தொழிலை அவனிடம் ஒப்படைக்கவேண்டும்!

எந்த ஒரு செயலையும் அதனை செய்யவேண்டிய சரியான முறை அறிந்து யார் சரியாக முடித்துவைப்பார்கள் என்று ஆராய்ந்து அறிந்து அந்த செய்லை அவர்களிடம் ஒப்படைப்பது அறிவாளர்களது கடமையாகும்! 

எல்லா செயல்களும் எல்லோராலும் செய்யமுடியும் என்று சொல்ல முடியாது! அதற்கென்று தகுதி பெற்றவர்களைத் தேர்ந்தெடுத்து அவர்களிடம் அந்த பொறுப்பை ஒப்படைப்பதே அறிவாளர்களின் வெற்றியின் ரகசியம்! 

ஆய்ந்து = ஆராய்ந்து
அவன்கண் = அவனது பொறுப்பில்

No comments: