Thursday, September 1, 2011

திருக்குறளும் என் பார்வையும்..!- 012


திருக்குறள் (12)

தீயினால் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே
நாவினால் சுட்ட வடு. (129)


தீயினால் சுட்ட புண்ணின் வடு வெளியே இருந்தாலும் உள்ளே ஆறிவிடும்;ஆனால் நாவினால் தீய சொல்கூறிச் சுடும் வடு என்றும் ஆறாது!

நம் உடலில் தீப்பட்டு புண்ணாகி விட்டால் அந்த தீக்காயமானது உள்ளுக்குள் ஆறிவிடும்! அதிக பட்சம் ஒரு மாதமோ இருமாதமோ கழிந்து அந்த புண் ஆறிவிடும்!மேலே வடு மட்டும் இருக்கும்!

ஆனால் ஒருவரை நாம் கடிந்து கூறி விட்டால் அந்த காயமானது ஆறவே ஆறாது! என்றென்றும் அது மறையாது! 


நாம்கொட்டிவிட்ட வார்த்தைகளைத் திரும்ப அள்ளிடவோ அதனை அழித்திடவோ முடியாது! காலம் காலமாய்அழியாத தழும்பை நம் உள்ளத்தில் ஏற்படுத்திவிடும் நாம் கூறிய கடும் சொற்கள்!

எனவே நண்பர்களே! யாரையும் கடுமையாய் பேசாதீர்கள்!

No comments: