Thursday, September 1, 2011

திருக்குறளும் என் பார்வையும்..!- 005

திருக்குறள் : (5) 


எப்பொருள் யார் யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பதறிவு. 
( 423 )

எப்பொருளை யார் யாரிடம் கேட்டாலும் கேட்டவாறே கொள்ளாமல் அப்பொருளின் மெய்யான பொருளைக்காண்பதே அறிவாகும்.

பல பேர் பலவிதமா சொல்லலாம்! கேட்கிற நமக்கு தான் சுய அறிவு இருக்கனும்!

யார் என்ன சொன்னாலும் அதில் உண்மை இருக்கிறதா என்று ஆராய்ந்து பார்த்து அதில் உண்மைப்பொருளை அறிந்து கொள்ள வேண்டும்! 


இந்த உலகம் பலவிதமாய் பேசும்! யார் எப்படி சொன்னாலும் சொல்லுவதை அப்படியே எடுத்துக்கொள்ளாமல் அதிலுள்ள உண்மையானவற்றை மட்டுமே எடுத்துக்கொள்ளவேண்டும் என்பதே அறிவு!

வாய் = வழி/ மூலம்

No comments: