திருக்குறள் : (1)
இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நாண
நன்னயம் செய்து விடல். ( 314 )
தமக்கு தீங்கு செய்பவரைத் தண்டிக்க ஒரே சிறந்த வழி என்னதெரியுமா?
அவரே வெட்கப்பட்டு தலை குனியும் வண்ணம் அவருக்கு நன்மை செய்தல தான்!
தமக்கு தீங்கு செய்பவரிடம் பகைமை பாராட்டுவதால் அவருடனனான பகைமை மேலும் பெருகுமே தவிர குறைவதில்லை! விளைவு? நாம் ஒரு நண்பரை இழப்பது மட்டுமல்ல- ஒரு பகைவரை ஏற்படுத்திக்கொள்வதும் தானே? ஆக இரட்டை நஷ்டம்!
எனவே தான் வள்ளுவர் ஒரே கல்லில் இரண்டு மாங்காய் பெறுவது எப்படி என்று கூறுகிறார்!
அவர் சொல்லும் வழியின் மூலம் ஒரு பகைமை ஒழிவதோடு ஒரு நட்பும் வளர வாய்ப்புகள் அதிகம்.
சொற்பொருள்:
இன்னா = தீங்கு
ஒறுத்தல் = தண்டித்தல்.
நாண = வெட்கப்படுமாறு
நன்னயம் = நல்+ நயம் = நற்செயல்
இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நாண
நன்னயம் செய்து விடல். ( 314 )
தமக்கு தீங்கு செய்பவரைத் தண்டிக்க ஒரே சிறந்த வழி என்னதெரியுமா?
அவரே வெட்கப்பட்டு தலை குனியும் வண்ணம் அவருக்கு நன்மை செய்தல தான்!
தமக்கு தீங்கு செய்பவரிடம் பகைமை பாராட்டுவதால் அவருடனனான பகைமை மேலும் பெருகுமே தவிர குறைவதில்லை! விளைவு? நாம் ஒரு நண்பரை இழப்பது மட்டுமல்ல- ஒரு பகைவரை ஏற்படுத்திக்கொள்வதும் தானே? ஆக இரட்டை நஷ்டம்!
எனவே தான் வள்ளுவர் ஒரே கல்லில் இரண்டு மாங்காய் பெறுவது எப்படி என்று கூறுகிறார்!
அவர் சொல்லும் வழியின் மூலம் ஒரு பகைமை ஒழிவதோடு ஒரு நட்பும் வளர வாய்ப்புகள் அதிகம்.
சொற்பொருள்:
இன்னா = தீங்கு
ஒறுத்தல் = தண்டித்தல்.
நாண = வெட்கப்படுமாறு
நன்னயம் = நல்+ நயம் = நற்செயல்
No comments:
Post a Comment