Thursday, September 1, 2011

திருக்குறளும் என் பார்வையும்..!- 016


திருக்குறள் (16)

செல்வத்துள் செல்வம் செவிச்செல்வம் அச்செல்வம்
செல்வத்துள் எல்லாம் தலை. 
(411)

ஒருவனுக்குச் சிறப்புடைய செல்வமானது கேள்வியால் எல்லாப்பொருளையும் கேட்டறியும் செல்வமே ஆகும். அச்செல்வமே பிற செல்வங்கள் எல்லாவற்றுக்குள்ளும் தலைமையானது! 

உலகத்துள் உள்ளசெல்வத்தில் எல்லாம் முக்கியமான செல்வம் என்ன தெரியுமா? நம் பகுத்தறிவால் கேட்டறியும் கேள்வி ஞானம்தான்! அந்த கேள்வி ஞானமானது எல்லா செல்வங்களிலும் தலையான செல்வமாக கருதப்படுகிறது! 

உலகத்தில் புகழ்பெற்று விளங்கிய பல சான்றோர்கள் முறையான கல்வியறிவு பெற்றிடாமலேயே கேள்வி ஞானத்தாலேயே மனிதம் கொண்டு மனிதம் வென்று இவ்வுலகைக் கட்டியாண்டவர்கள் என்பதில் ஐயமில்லைதானே!

No comments: