Thursday, September 1, 2011

திருக்குறளும் என் பார்வையும்..!- 013


திருக்குறள் (13)


தெய்வத்தான் ஆகாதெனினும் முயற்சி தன்
மெய் வருத்தக் கூலி தரும்.
 (619)

ஊழின் காரணத்தால் ஒரு செயல் முடியாமல் போகுமாயினும் முயற்சி தன் உடம்பு வருந்திய வருத்தத்தின் கூலியையாவது கொடுக்கும்!

நாம் கடினமாய் உழைத்தும் அதற்குரிய பலன்களை அந்த இறைவன் வழங்காது போனாலும் நாம் முயற்சித்த பலன்களை நாம் கண்டிப்பாக அடைந்தே தீருவோம்! 

இறைநம்பிக்கை உள்ளவர்க்கு தான் உழைத்த உழைப்பின் பலனை இறைவன் வழங்கிடுவான்! அவ்வாறு இறை நம்பிக்கை இல்லாதவர்கள் விரக்தி அடைய வேண்டிய அவசியம் இல்லை! அவர்களுக்கு தமது உடல் வருத்தத்திற்கேற்ற ஊதியம் கிடைத்தே தீரும்

No comments: