Thursday, September 1, 2011

திருக்குறளும் என் பார்வையும்..!- 020


திருக்குறள் (20) 

அஞ்சுவது அஞ்சாமை பேதைமை அஞ்சுவது
அஞ்சல் அறிவார் தொழில். 
(428)

அஞ்சத்தக்கதைக்கண்டு அஞ்சாதிருப்பது அறியாமையாகும். அஞ்சத்தக்கதைக்கண்டு அஞ்சுவதே அறிவுடையவரின் செயலாகும்!

எந்த விஷயத்தை கண்டு அஞச வேண்டுமோ அதற்கு பயப்படாம இருப்பது முட்டாள்தனம்!
எதைக்கண்டு அஞ்சவேண்டுமோ அதைக்கண்டு அஞ்சுவது அறிவுடையவர்கள் செயலாகும்! 


அதாவது அறிவுடையவர்கள் அஞ்ச வேண்டிய விஷயத்துக்கு அஞ்சுவார்கள்! வீராப்பு காட்ட மாட்டார்கள்! 

பேதைமை = முட்டாள் தனம்

No comments: