Thursday, September 1, 2011

திருக்குறளும் என் பார்வையும்..!- 018


திருக்குறள் (18) 

இடுக்கண் வருங்கால் நகுக அதனை
அடுத்தூர்வது அஃதொப் பதில் 
(621)

துன்பம் வரும்போது அதற்கு மனக்கலங்காமல் மகிழ்வானாக! அத்துன்பத்தைத்தொடர்ந்து அழிக்கவல்லது அம்மகிழ்ச்சி போல வேறொன்றில்லை!

வாழ்க்கையில் துன்பம் வரும்போது அத்துன்பத்தைக்கணடு வருந்தி அழாமல் அத்னைக்கண்டு சிரிக்க வேண்டும்! அவ்வாறு சிரிப்பதே அந்த துன்பத்தை எதிர்கொள்ளும் மிகச்சிறந்த வழியாகும்! 

சிலர் இந்த குறளை வேறுவிதமாய் எடுத்துக்கொண்டு குறை கூறுவர்!
உதாரணமாக கண்ணதாசன் அவர்களின் ஒரு பாடல் '' துன்பம் வரும் வேளையிலே சிரிங்க என்று சொல்லிவைத்தார் வள்ளுவர் சரிங்க! பாம்பு வந்து கடிக்கையில் பாழும் உடல்துடிக்கையில் யார்முகதில் பொங்கிவரும் சிரிப்பு?''


ஆனால் எனது கருத்து என்ன வெனில் துன்பம் வரும்போது அதற்காய் துவண்டுபோய் அழுது மூலையில் ஒடுங்கிக்கிடந்தால் அத்துன்பம் ஓடி ஒளிவது இல்லை அல்லவா?
வரும் துன்பத்தை எதிர்நோக்கிப்புன்னகைத்து துணிவுடன் எதிர்கொண்டால் அத்துன்பம் காணாமல் போய்விடும் என்பதே வள்ளுவர் கூறும் உண்மை!


இடுக்கண் = துன்பம்
அடுத்தூர்வது = எதிர்கொள்வது
அஃதொபபது இல் = அதற்கு இணையானது இல்லை

No comments: