Thursday, September 1, 2011

திருக்குறளும் என் பார்வையும்..!- 014


திருக்குறள் (14) 

அடக்கம் அமரருள் உய்க்கும் அடங்காமை
ஆரிருள் உய்த்து விடும். 
(121)

ஒருவன் அடக்கத்துடன் வாழ்வானாயின் அவ்வடக்கம் அவனை விண்ணுலகத்தில் வைத்து போற்றப்படும் அளவுக்கு மேன்மையுடையவனாய் மாற்றிவிடும்! அடங்காமையோ ஒருவனை கொடிய நரகத்தில் கொண்டு செலுத்திவிடும்! அதாவது நரகத்துக்கிணையான துன்பங்களை இவ்வுலகிலேயே அனுபவிப்பான் என்கிறார் வள்ளுவர்!

ஒருவன் எவ்வளவு கற்றறிந்தாலும் அடக்கம் என்பது மிக அவசியம்!
அந்த அடக்கம் அவனை மேலானவர்களில் ஒருவராக்கிவிடும்!

அவ்வாறில்லாமல் அடங்காமைஎனும் ஆணவம்கொண்டு ஒருவன் நடப்பானாகில் அந்த ஆணவம் அவனை தோல்விஎனும் கடுமையான இருளில் கொண்டு போய்த்தள்ளி விடும்! 


உய்க்கும் = கொண்டு சேர்க்கும்
ஆரிருள் = கடும் இருள்

No comments: