Thursday, September 1, 2011

திருக்குறளும் என் பார்வையும்..!- 021


திருக்குறள் (21) 

எண்ணித்துணிக கருமம் துணிந்தபின்
எண்ணுவம் என்பது இழுக்கு! 
(467)

செய்யத்தகுந்த செயலையும் வழிகளை எண்ணிய பிறகே துணிந்து தொடங்க வேண்டும்; துணிந்த பின் எண்ணிப்பார்க்கலாம் என்பது குற்றமாகும்.

ஒரு காரியத்தில் இறங்கும்போது எல்லாவற்றையும் எண்ணிப்பார்த்து அலசி ஆராய்ந்து முடிவெடுக்க வேண்டும்!
அப்படி ஆராய்ந்து அந்த காரியத்தில் இறங்கியபின் பிறகு அதைப்பற்றி எண்ணுவது குற்றமாகும்! 


துணிக = செயல் படுக
கருமம் = செயல்
இழுக்கு = குற்றம்

No comments: