Thursday, September 1, 2011

திருக்குறளும் என் பார்வையும்..!- 008


திருக்குறள் (8) 

உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார் மற்றெல்லாம்
தொழுதுண்டு பின்செல் பவர்.
 (1033)

உழவு செய்து அதனால் கிடைத்ததை உண்டு வாழ்கின்றவரே உரிமையோடு வாழ்கின்றவர்; மற்றவர் எல்லோரும்பிறரைத்தொழுதுண்டு பின்செல்கின்றவரே. 

இவ்வுலகத்தை நடத்திச்செல்பவர் யார் தெரியுமா?
மற்ற மனிதர்க்கெல்லாம் உழுது பயிர் செய்து உண்ண உணவளிக்கும் உழவர்தான்!
மற்ற எல்லோரும் அவரைத் தொழுது பின் செல்ல வேண்டியவரே ஆவார்!
சாப்பாடு தானெ முக்கியம் ஒரு மனிதனுக்கு?


அவங்க சேத்துல கைவைக்கலைன்னா நாம எல்லாம் சோத்துல கைவைக்கமுடியுமா?

No comments: