திருக்குறள் (11)
மோப்பக் குழையும் அனிச்சம் முகம்திரிந்து
நோக்கக் குழையும் விருந்து. (90)
அனிச்சமலர் சிறிது முகர்ந்தாலே வாடிவிடும். அதைப்போல நமது விருந்தினர் நாம்சிறிது முகம் மாறிப்பேசினாலே வாடி விடுவர்:ஓடி விடுவர்!
விருந்தினர் என்பவர் தெய்வம் போன்றவர்! அவர்கள் நம்மில்லம் வரும்போது நாம் ஒன்றை நினைவில்வைத்துக்கொள்ளவேண்டும்!
அவர்கள் வீடு வாசல் இல்லாமலோ உண்ண உணவு இல்லாமலோ நம்மைத்தேடி வரவில்லை என்பதை நாம் நினைவில் கொள்ளவேண்டும்!
நம்மீது கொண்டுள்ள அன்பின் காரணமாய் நம்மில்லம் வரும் அவர்களை நாம் இன்முகத்துடன் வரவேற்று அவர்கள் அகமும் முகமும் மலர உபசரிக்க வேண்டும்! அவர்களைச் சற்றே முகம் கோணிப்பார்த்தாலும் அவர்கள் முகமும் அகமும் வாடிவிடும்! எதுபோல என்றால் முகர்ந்தாலே வாடிப்போகும் அனிச்சமலர் போல என்கிறார் திருவள்ளுவர்!
மோப்ப = முகர
குழையும் = வாடி விடும்
விருந்து = விருந்தினர்
நோக்கக் குழையும் விருந்து. (90)
அனிச்சமலர் சிறிது முகர்ந்தாலே வாடிவிடும். அதைப்போல நமது விருந்தினர் நாம்சிறிது முகம் மாறிப்பேசினாலே வாடி விடுவர்:ஓடி விடுவர்!
விருந்தினர் என்பவர் தெய்வம் போன்றவர்! அவர்கள் நம்மில்லம் வரும்போது நாம் ஒன்றை நினைவில்வைத்துக்கொள்ளவேண்டும்!
அவர்கள் வீடு வாசல் இல்லாமலோ உண்ண உணவு இல்லாமலோ நம்மைத்தேடி வரவில்லை என்பதை நாம் நினைவில் கொள்ளவேண்டும்!
நம்மீது கொண்டுள்ள அன்பின் காரணமாய் நம்மில்லம் வரும் அவர்களை நாம் இன்முகத்துடன் வரவேற்று அவர்கள் அகமும் முகமும் மலர உபசரிக்க வேண்டும்! அவர்களைச் சற்றே முகம் கோணிப்பார்த்தாலும் அவர்கள் முகமும் அகமும் வாடிவிடும்! எதுபோல என்றால் முகர்ந்தாலே வாடிப்போகும் அனிச்சமலர் போல என்கிறார் திருவள்ளுவர்!
மோப்ப = முகர
குழையும் = வாடி விடும்
விருந்து = விருந்தினர்
No comments:
Post a Comment