Thursday, September 1, 2011

திருக்குறளும் என் பார்வையும்..!- 032


திருக்குறள் (32) 

ஈன்றாள் பசிகாண்பான் ஆயினும் செய்யறக
சான்றோர் பழிக்கும் வினை. 
(656)


பெற்ற தாயே பசித்து வருந்தி இருந்தாலும் பெரியோர் பழிக்கின்ற செயல்களை ஒருவன் செய்யக்கூடாது. 

உலகில் ஒருவனுக்கு மிக உயர்ந்த உறவு தாய் உறவு ஆகும்! அந்த தாயே பசியுடன் இருந்தாலும் அந்த பசியைப்போக்கக் கூட ஒருவன் பெரியோர் தாழ்வாக நினைக்கும் செயல்களைச் செய்யக்கூடாது! 

தாயிற்சிறந்த தொரு கோயிலில்லை என்றாலும் உலகம் பழிக்கின்ற செயலைத் தாய் காரணமாகக்கூட செய்யக்கூடாதென்பதும் சிறந்த தாய் இதை சற்றும்விரும்ப மாட்டாள் என்பதும் வள்ளுவ கருத்து.

ஈன்றாள் = தாய்
பழிக்கும் = தாழ்வாக நினைக்கும்
வினை = செயல்

1 comment:

Anonymous said...

கலை அண்ணா.. நலமா? தற்பொழுது தங்களை ஈகரையில் காணமுடியவில்லையே..
என்றும் அன்புடன்
தமிழ்நேசன்