Thursday, September 1, 2011

திருக்குறளும் என் பார்வையும்..!- 015


திருக்குறள் (15) 

அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை
இகழ்வார்ப் பொறுத்தல் தலை. 
(151)

தன்னைத் தோண்டுபவரைப் பொறுத்து தாங்கிக் கொள்ளும் நிலம்போலத் தம்மை இகழ்ந்து பேசுபவரைப் பொறுத்துக்கொள்ளுதல் முதன்மையான அறமாகும்!

இந்த பூமியானது தம்மை எத்தனை தோண்டினாலும் தோண்டுபவரையும் தாங்கி மேலும் அவருக்கு வேண்டியன எல்லாம் வழங்கும் இயல்புடையது! 

அதைப்போல தம்மை இகழ்வாரையும் பொறுத்துக்கொண்டு அவரைக் காத்துவருவது சான்றோரது தலையாய குணம் ஆகும்! 

அகழ்வார் = தோண்டுபவர்

No comments: