Thursday, September 1, 2011

திருக்குறளும் என் பார்வையும்..!- 023


திருக்குறள் (23)

அழிவந்த செய்யினும் அன்பறார் அன்பின்
வழிவந்த கேண்மை யவர். 
(807)

அன்புடன் தொன்றுதொட்டு வந்த உறவை உடையவர், அழிவு தரும் செயல்களைப் பழகியவர் செய்தபோதிலும், தம் அன்பு நீங்காமலிருப்பர்.

அதாவது அன்பையே நினைத்து அன்பைமட்டுமே வழங்கி அன்புக்காகவே ஏங்கிப பழகும் நண்பர் தாம் அன்பு செலுத்தியவர் தமக்கு கெடுதல்களே செய்தாலும் தமது அன்புநிலை மாறாமல் என்றும் அன்புடைய நண்பராய் இருந்து வருவர்! 

அழிவந்த = கெடுதல்கள்
அன்பறார் = அன்பு மாறார்
கேண்மை = நட்பு

No comments: