Thursday, September 1, 2011

திருக்குறளும் என் பார்வையும்..!- 007


திருக்குறள் (7) 

மயிர்நீப்பின் வாழாக் கவரிமா அன்னார்
உயிர் நீப்பர் மானம் வரின். 


தன் உடம்பிலிருந்து மயிர் நீங்கினால் உயிர் வாழாத கவரிமானைப்போன்றவர் மானம் அழிய நேர்ந்தால் உயிரை விட்டுவிடுவர்!

கவரிமான் என்றொருவகை மான் உண்டு.அதன் சிறப்புக்குணம் என்ன வெனில் தன் உடலிலிருந்து முடி கொட்டினால் அது உயிர் வாழாது!

அதைப்போல் தன்மானத்தை உயர்வாக மதிக்கும் சான்றோர் தமது தன்மானத்துக்கு இழுக்கு வந்து விட்டால் அதைத் தாங்க மாட்டர்கள்!
தம் உயிரை மாய்த்துக்கொள்வர்! 


அன்னார் = போன்றவர்

No comments: