Thursday, September 1, 2011

திருக்குறளும் என் பார்வையும்..!- 022


திருக்குறள் (22) 

செயற்கரிய யாவுள நட்பின் அதுபோல்
வினைக்கரிய யாவுள காப்பு? 
(781)

நட்பினைப்போல் செயற்கரிய காரியங்களைச் செய்ய வைக்கும் அரியது எதுவும் இல்லை! அத்தகைய நட்பைப்பெற்றவர் தமக்கு எதிராகச் செயல்படும் பகைவர்களையும் அவர்களின் செயல் களையும் தடுப்பதுமான பாதுகாப்பு அரண் அந்த நட்பைவிடச் சிறந்தது எதுவும் இல்லை!! 

சாதாரணமாச் சொல்லனும் னா நட்பு போல வியப்பான செயல் செய்யும் ஒரு உணர்வு உலகத்தில் கிடையாது!
அந்த நட்பு எந்த எதிரியையும் அவர் செயல்களையும் முறியடிக்கும்! 


இன்னும் சொல்லப்போனால் நட்புஒன்றுதான் வாழவைக்கும் என்னைப்போன்ற தாய் இழந்தோரையும்!


யாவுள = எது உள்ளது?
காப்பு = பாதுகாவல்

No comments: