Thursday, September 1, 2011

திருக்குறளும் என் பார்வையும்..!- 030


திருக்குறள் (30) 

தொழுத கையுள்ளும் படையொடுங்கும் ஒன்னார்
அழுத கண்ணீரும் அனைத்து. (828)


எதிரிகள் நம்மைத் தொழும்கைகளில் கொலைக்கருவி மறைந்திருப்பது போல அவர்கள் விடும் கண்ணீரிலும் கொலை ஆயுதம் மறைந்திருக்கும்! 

நம் எதிரிகள் நம்மைக் கண்டு கைகூப்பி வணங்கும்போது நாம் எச்சரிக்கையாய் இருக்க வேண்டும்! காரணம் என்ன வென்றால் அவர்களின் தொழும் கைகளுக்குள் கொலைக்கருவி மறைந்திருக்கும்! அவர்கள் விடுகின்ற கண்ணீரில்கூட கொலைநோக்கமே நிறைந்திருக்கும் என்று நாம் உணரவேண்டும்! 

ஒன்னார் = ஒத்தவர்

No comments: