திருக்குறள் (9)
உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே
இடுக்கண் களைவதாம் நட்பு. (788)
உடை நெகிழ்ந்தவனுடைய கை உடனே உதவிக்காப்பது போல் நண்பனுக்குத் துன்பம் வந்தால் அப்பொழுதே சென்று துன்பத்தைக் களைவது நட்பு!
நாம் ஒரு சபையில் இருக்கும் போது பலர் முன்னிலையில் நாம் உடுத்திய உடை நழுவினால் நமது கைகள் உடனே விரைந்து சென்று நழுவும் உடையை சரிப்படுத்த விரையும்! சரியா இல்லையா?
அதைப்போல ஒரு நண்பனுக்கு ஒரு துன்பம் நேரும்போது என்ன ஏதுவென்று ஆராய்ந்துகொண்டு நேரத்தை விரையம் செய்யாமல் உடனே ஓடி அந்த துன்பத்தை நீக்க முயல்வதுதான் உண்மையான நட்பு என்று வள்ளுவர் கூறுகிறார்!
உடுக்கை = உடை
இடுக்கண் = துன்பம்
களைதல் = நீக்குதல்
இடுக்கண் களைவதாம் நட்பு. (788)
உடை நெகிழ்ந்தவனுடைய கை உடனே உதவிக்காப்பது போல் நண்பனுக்குத் துன்பம் வந்தால் அப்பொழுதே சென்று துன்பத்தைக் களைவது நட்பு!
நாம் ஒரு சபையில் இருக்கும் போது பலர் முன்னிலையில் நாம் உடுத்திய உடை நழுவினால் நமது கைகள் உடனே விரைந்து சென்று நழுவும் உடையை சரிப்படுத்த விரையும்! சரியா இல்லையா?
அதைப்போல ஒரு நண்பனுக்கு ஒரு துன்பம் நேரும்போது என்ன ஏதுவென்று ஆராய்ந்துகொண்டு நேரத்தை விரையம் செய்யாமல் உடனே ஓடி அந்த துன்பத்தை நீக்க முயல்வதுதான் உண்மையான நட்பு என்று வள்ளுவர் கூறுகிறார்!
உடுக்கை = உடை
இடுக்கண் = துன்பம்
களைதல் = நீக்குதல்
No comments:
Post a Comment