Thursday, September 1, 2011

திருக்குறளும் என் பார்வையும்..!- 010


திருக்குறள் (10) 

அன்பிற்கும் உண்டோ அடைக்கும்தாழ் ஆர்வலர்
புண்கண்ணீர் பூசல் தரும்.
 (71)

அன்பினைப் பிறர் அறியாமல் அடைத்துவைக்கும் தாழ்ப்பாள் உண்டோ? அன்புடையார்க்கு ஏற்பட்ட துன்பம் கண்டவிடத்துத் தம்மையறியாமல் வெளிப்படும் சிறு கண்ணீரே அன்பைத் தெரியப்படுத்திவிடும்.

நாம் நமக்கு மிகவும் வேண்டப்பட்டவ்ர் மீது செலுத்தும் அன்பைப் பூட்டிவைக்கும் வலுமையான் பூட்டு இது வரை கண்டுபிடிக்கப்படவில்லை!

நாம் யார் மீது அன்பு செலுத்துகிறோமோ அவர் புண்படும்போதும் துன்பப்படும்போதும் நம்மை அறியாமல் நம் கண்களில் இருந்து வெளிப்படும் கண்ணீர் அவர்மீது கொண்ட அன்பை வெளிப்படுத்திவிடும்!

தாழ் = பூட்டு
ஆர்வலர் = அன்புடையோர்
புண் = துன்பம்
பூசல் = சான்று

No comments: