Thursday, September 1, 2011

திருக்குறளும் என் பார்வையும்..!- 027


திருக்குறள் (27) 

ஏதிலார் குற்றம்போல் தங்குற்றம் காண்கிற்பின்
தீதுண்டோ மன்னும் உயிர்க்கு. 


மற்றவரிடம் காணும் குறறங்களைத் தம்மிடமும் காணும் உள்ளம் நம்மிடம் இருந்தால் இந்த உலகத்தில் எந்த மனிதருக்கும் தீங்குகளே இல்லை!
மனிதருக்கு எப்போதுமே பிறர் மீது குற்றம் சாட்டுவதுதான் இயல்பாக இருந்து வருகிறது! தம் குற்றத்தைப் பற்றி எண்ணுவதே இல்லை!
ஆனால் பிறர் குற்றத்தைப்போல் தம்குற்றத்தையும் காணும்போது அங்கே புரிதல் வருகிறது! எந்த வித தீங்கும் வருவதில்லை! 


ஏதிலார் = அயலார்
தீது = தீங்கு
மன்னும் = நிலை பெற்ற

No comments: