Thursday, September 1, 2011

திருக்குறளும் என் பார்வையும்..!- 024


திருக்குறள் (24) 
வாள்போல பகைவரை அஞ்சற்க அஞ்சுக
கேள்போல பகைவர் தொடர்பு 
(882)

வாளைப் போல வெளிப்படையான பகைவர்க்கு அஞ்ச வேண்டியதில்லை! ஆனால் உறவினரைப்போல இருந்து உட்பகை கொண்டவரின் தொடர்புக்கு அஞ்ச வேண்டும்! 

வள்ளூவர் கருத்து என்னவென்றால் வாளைப்போல மறையாமல் எதிரில் நின்று வெளிப்படையாக நம்மைத் தாக்க முயலும் எதிரிகளிடம் இருந்து நம்மை எளிதில் காத்துக்கொள்ள முடியும்! ஏனென்றல் எதிரிகள் நேரில் நின்று தாக்குபவர்கள்! 

ஆனால் உறவினர் என்று சொல்லிக்கொண்டு நம்முடனே இருந்து நம்மை அழிக்க முயலும் உட்பகை கொண்டவரின் தொடர்புக்கு எப்போது அஞ்சவேண்டும்! 

ஏன் என்றால் ஊர்கெடுக்காது ; உறவுதான் கெடுக்கும் என்பார்கள் பெரியோர்! 


கேள் = உறவு

No comments: