Thursday, September 1, 2011

திருக்குறளும் என் பார்வையும்..!- 019


திருக்குறள் (19) 

ஊழின் பெருவலி யாவுள? மற்றொன்று
சூழினும் தான் முந்துறும்
(380)

ஊழை ( விதியை )விட மிக்க வலிமையுள்ளவை வேறு எவை உள்ளன? ஊழை விலக்கும் பொருட்டு மற்றொரு வழியை ஆராய்ந்தாலும் அங்கும் தானே முன் வந்து நிற்கும்!

நம்மைப் படைத்த இறைவன் வகுத்த விதியை வெல்லக்கூடிய சக்தி வேறு எதுவும் இல்லை!
அதனை விட வலியது என நாம் நினைக்கும் ஒரு சக்தி யானது விதியை வெல்ல முயற்சி செய்வது போல் தெரிந்தாலும் இறுதியில் விதியின் சிரிப்பு தான் நம்மை வெல்லும்! 


ஆக விதியை வெல்லும் வலிமை யாருக்கும் கிடையாது! 

ஊழ் = விதி
வலி = வலியது

No comments: