Thursday, September 1, 2011

திருக்குறளும் என் பார்வையும்..!- 004

திருக்குறள் : (4) 


முகநக நட்பது நட்பன்று நெஞ்சத்து
அகநக நட்பது நட்பு. 
(786)

முகம் மட்டும் மலரும்படியாக நட்புச் செய்வது நட்பு அன்று! நெஞ்சமும் மலரும்படியாக உள்ளன்பு கொண்டுநட்புச்செய்வதே நட்பு ஆகும்!

நட்பென்பது வெறும் முகம் மகிழ வேண்டி இனிமையான பேச்சுக்களைப் பேசி பழகுவது அல்ல.

உண்மையான நட்பென்பது உள்மனத்தை மகிழவைப்பதாக இருக்க வேண்டும். 


திருவள்ளுவர் என்ன சொல்ல வருகிறார்?

வெறும் இனிமையான பேச்சுக்களை நம்மை மகிழ்விக்க பேசுபவன் உண்மையான நண்பன் அல்ல! நம் மனத்தை நல்லவிதமாக மாற்றி நமக்கு தேவையான நேரத்தில் நம்மை தட்டிக்கேட்டு நல்ல அறிவுரைகளைக்கூறி நல்வழிப்படுத்துபவனே உண்மையான நண்பன்! 

நக = மகிழ வைக்க
அகம் =உள்

No comments: