Thursday, September 1, 2011

திருக்குறளும் என் பார்வையும்..!- 028


திருக்குறள் (28) 

யாகாவா ராயினும் நாகாக்க காவாக்கால்
சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு. 
( 127 )

காக்க வேண்டியவற்றுள் எவற்றைக்காக்கத் தவறினாலும் நாவை மட்டுமாவது காக்க வேண்டும்! காக்கத்தவறினால் சொற்குற்றங்களால் அவமானப்பட்டு துன்பமடைய நேரிடும்! 

நாம் காக்க வேண்டிய புலன்கள் ஐந்து!

1.கண் = தீயவற்றினைப்பார்ப்பதிலிருந்து
2.காது = பொல்லாதவை கேட்பதிலிருந்து
3.மூக்கு = சில நறுமணங்களும் அவற்றால் வரும் தீங்குகளிலிருந்தும்
4.உடல் = தீயவற்றை அனுபவிப்பதிலிருந்து
5.நாக்கு = பொல்லாங்கு கூறுவதிலிருந்து 


இவற்றில் எவற்றைக் காக்கத் தவறினானும் துன்பங்கள் தாம் வந்தடையும் என்பதில் ஐயமில்லை! ஆனால் இவற்றுள் மிக முக்கியமாய் கட்டுப்படவேண்டியது நாக்கு! 

சோற்றைக் கொட்டினால் அள்ளிவிடலாம்.ஆனால் கொட்டிய சொற்களை அள்ளமுடியாது அல்லவா? 

யா காவார் = யாது காக்காவிடினும்
சோகாப்பர் = துன்பப்படுவர்

No comments: