Thursday, September 1, 2011

திருக்குறளும் என் பார்வையும்..!- 002

திருக்குறள் : (2) 


எண்ணிய எண்ணியாங்கு எய்துவர் எண்ணியர்
திண்ணியராகப் பெறின். 
(666)

தாம் நினைத்த செயல்களை நினைத்தபடி செய்து முடிப்பவர் யார் தெரியுமா?
அந்த செயல்களை எப்படியும் செய்தே தீர வேண்டும் என்று உறுதியாக நினைப்பவர் தான்!
அதன் உள்ளர்த்தம் என்ன என்றால் ஒரு காரியம் நடத்த ஒரு முடிவு எடுத்தால் அந்த உறுதியில் முனைப்பாக இருக்கவேண்டும்! அப்போது தான் வெற்றி பெற முடியும் எனபதுதான்! 


எண்ணிய= எண்ணியது
எண்ணியாங்கு=எண்ணியபடி
எய்துவர்= வெற்றி பெறுவர்
எண்ணியர்= எண்ணுபவர், நினைப்பவர்
திண்ணியர்- உறுதியானவர்
பெறின்=பெற்றால்

No comments: