Thursday, September 1, 2011

திருக்குறளும் என் பார்வையும்..!- 003

திருக்குறள் : (3) 


அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார்
என்பும் உரியர் பிறர்க்கு.
 (72)

மனதில் அன்பு இல்லாதவர்கள் இந்த உலகில் காணக்கிடைக்கும் எல்லாவற்றையும் தமது தமது என பரபரப்பார்கள்! மனம் நிறைந்த அன்புடையவர்கள் தமது எலும்பைக்கூட பொருட்படுத்தாமல் பிறக்கு வழங்கி மகிழ்வார்கள்.

இந்த உலகத்துல இருக்கும் மனிதர்களை இரண்டு விதமா பிரிக்கலாம்!

1. அன்புடையார்.

2.அன்பிலார் 


இரண்டாம் வகை மனிதர்கள் சுயநலக்காரர்கள்.
அவர்கள் எல்லாம் தமதென்று நினைப்பவர்கள். இவ்வுலகத்துக்கு தேவை இல்லாதவர்கள்.

முதல் வகை மனிதர்கள்தாம் இவ்வுல்கை நடத்துபவர்! அவர்கள் பிறருக்காக தம் எலும்பையும் தரத் தயாராய் இருப்பவர்கள்!
அவர்கள் தியாகச் செம்மல்கள்! 


என்பு = எலும்பு

No comments: