Thursday, September 1, 2011

திருக்குறளும் என் பார்வையும்..!- 029


திருக்குறள் (29) 

தொட்டனைத் தூறும் மணற்கேணி மாந்தர்க்குக்
கற்றனைத் தூறும் அறிவு.
 (396)

மணல் கேணியானது தோண்டத்தோண்ட நீரூறி நமக்கு தாகத்தைத் தணிப்பது போல் நாம் கற்கும் நூல்களானது கற்கும்தோறும் நமக்கு அறிவை வழங்கிவருகிறது! 

எப்படி கிணறு நமக்கு எத்தனை ஆழம் தோண்டத் தோண்ட நீர் வழங்கி
நமது தாகத்தைத்தீர்த்து வைக்கிறதோ அதைப்போல நாம் கற்கும் நூல்கள் நமக்கு அறிவுத்தாகத்தைத் தீர்த்துவருகிறது! 


தொட்டனைத்து = தோண்டும்போதெல்லாம்
கேணி = கிணறு

No comments: