Thursday, September 1, 2011

திருக்குறளும் என் பார்வையும்..!- 026


திருக்குறள் (26) 
வெள்ளத் தனைய மலர் நீட்டம் மாந்தர்தம்
உள்ளத் தனைய துயர்வு! 
(595)

நீர்ப்பூக்களின் காம்பின் நீளம் அது நிற்கும் நீரின் உயரத்தின் அளவுக்கேற்றதாய் இருக்கும்! அதைப்போல மனிதர்களின் உயர்வானது அவர்களின் உள்ளத்தின் உயர்வைப்பொறுத்தே அமையும்!

மனிதர்கள் மனத்துக்கேற்ப வாழ்வர்! நல்லதை நினைத்து நல்லதையே செய்து வந்தால் அவர்களின் உயர்வைத் தடுக்க எந்த சக்தியாலும் முடியாது! 

அனைய = ஏற்ப
நீட்டம் = நீளம்

No comments: